முன்னணி தயாரிப்பாளரை அலையவிடும் விஷால்!

புதன், 14 ஏப்ரல் 2021 (15:48 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர் பி சௌத்ரியை விஷால் அலைக்கழிக்கும் விதமாக நடந்து கொள்கிறாராம்.

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளரும் பைனான்ஸியருமாக விளங்குபவர் ஆர் பி சௌத்ரி. இதுவரை 93 படங்களை அவர் தயாரித்துள்ளார். சக தயாரிப்பாளர்கள் முதல் நடிகர்கள் வரை அனைவரும் அவரை மரியாதையாக நடத்துவார்கள். ஆனால் அப்படிப்பட்டவரையே விஷால் ஒரு வருடமாக அலையவிட்டு வருகிறாராம்.

விஷால் தன் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஆர் பி சௌத்ரியிடம் கடன் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த தொகைக்கு ஒரு படத்தை நடித்துத் தருவதாகக் கூறியுள்ளார். அதை நம்பி சௌத்ரியும் ஒரு புதுமுக இயக்குனரிடம் கதை கேட்டு ஓகே செய்து விஷாலுக்கு சொல்ல அனுப்பியுள்ளார். ஆனால் ஒரு வருடமாக அந்த இயக்குனரை சந்திக்காமல் அலைக்கழித்து வருகிறாராம் விஷால்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்