வில்லன் விஜய் சேதுபதியா? டி.ராஜேந்தரா?

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (11:18 IST)
இப்படியொரு கேள்வி, கே.வி.ஆனந்த் படத்தை தொடங்கிய போதிருந்து கேட்கப்பட்டு வருகிறது. கே.வி.ஆனந்தின் புதிய படத்தில் விஜய் சேதுபதியும், டி.ராஜேந்தரும் நடித்து வருகின்றனர்.


 


மடோனா செபஸ்டியான் நாயகி. இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
 
இந்நிலையில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த கே.வி.ஆனந்த், யார் வில்லன் என்ற கேள்விக்கு பதிலளித்தார். "இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, டி.ஆர். இருவருக்குமே வில்லத்தனம், ஹீரோயிசம் என்பது கலந்து இருக்கும். கிளைமாக்சில்தான் யார் வில்லன் என்பது தெரியவரும். அதை படம் பார்க்கும்போது ரசிகர்களே தெரிந்து கொள்வார்கள்" என்று அவர் கூறினார்.
 
விரைவில் பாடல் காட்சி ஒன்றுக்காக விஜய் சேதுபதியும், மடோனா செபஸ்டியானும் அமெரிக்கா செல்லவுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்