நடிகர் விக்ரமின், மகள் ஐஸ்கிரீம் கடையில், ஐஸ்கிரீம் சாப்பிட்ட போது ரூ.12 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம் திருடு போய்விட்டதாக பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து அக்ஷிதா நேற்று மாலை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். ஆயிரம் விளக்கு, காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு ஐஸ்கிரீம் சாப்பிட சென்றிருந்தேன். ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு, வெளியில் வந்து பார்த்த போது, எனது கையில் அணிந்து இருந்த வைர மோதிரத்தை காணவில்லை. யாரோ நைசாக திருடி சென்றுவிட்டனர். மோதிரத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.