கோட் படத்தில் மட்டுமில்லை… இந்தபடத்திலும் ஏ ஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் வருகிறாரா?

vinoth

ஞாயிறு, 23 ஜூன் 2024 (09:01 IST)
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். இவர் நடித்த ‘மதுர வீரன்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு அவருக்கான  அடையாளத்தைப் பெற்று தந்தது.

இந்நிலையில் இப்போது சண்முகபாண்டியன் காட்டையும் யானைகளையும் பின்னணியாகக் கொண்ட படை தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளன. ஷூட்டிங் 80 சதவீதம் அளவுக்கு முடிந்துள்ள நிலையில் இன்னும் 10 நாட்கள் மட்டும் மீதமுள்ளது.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். அதற்கான ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்தை ஒரு கதாபாத்திரத்தில் உருவாக்க உள்ளார்களாம். ஏற்கனவே விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்