விஜய் சேதுபதி நடிப்பில், ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவான ஏஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் ரிசல்ட் சுமாராக இருந்ததால், தற்போது தியேட்டரில் கூட்டம் குறைந்துவிட்டதாகவும், வசூல் அடிவாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, ஆறுமுககுமார் இயக்கிய 'ஒரு நல்ல நாள் பார்த்து கதை சொல்கிறேன்' என்ற படம் படுதோல்வி அடைந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஏஸ் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. தற்போது இந்த படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாததை அடுத்து, இயக்குனரின் சினிமா கேரியரே கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஒரு படத்தில் எவ்வளவு பெரிய ஹீரோ இருந்தாலும், அந்த படத்தின் கதை சரியாக இருந்தால்தான் மட்டுமே ஓடும் என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' இருந்தது என்றும், எனவே பெரிய நடிகர்களாக இருந்தாலும் சரி, பெரிய இயக்குனர்களாக இருந்தாலும் சரி, கதையில் கவனம் செலுத்தாவிட்டால் இந்த மாதிரி நிலை ஏற்படும் என்றும் இந்த படத்தின் ரிசல்ட் மூலம் உணர முடிகிறது.