மீண்டும் ரிலீஸாகிறது விஜய்யின் ‘தெறி’

சனி, 7 ஏப்ரல் 2018 (09:57 IST)
விஜய் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ரிலீஸான ‘தெறி’, மறுபடியும் ரீலீஸாகிறது.
விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் ரிலீஸான படம் ‘தெறி’. சமந்தா, எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்தார். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸானது.
 
வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. எனவே, அதைச் சிறப்பிக்கும் வகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் வருகிற 14ஆம் தேதி ‘தெறி’ படம் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்