விஜய் வீட்டின் முன் காத்திருந்த மக்கள் இயக்க நிர்வாகி… காவல்துறை விசாரணை!

திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (16:06 IST)
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் முன்னாள் நிர்வாகியாக இருந்த குமார் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தில் துணை செயலாளராக இருந்தவர் குமார். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வகித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று சென்னையில் உள்ள விஜய்யின் வீட்டின் முன்னர் குடும்பத்தோடு வந்து நின்றுள்ளார். ஆனால் அவரை விஜய் சந்திக்க முடியாது எனக் கூறியும் அவர் அங்கிருந்து செல்லாததால் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சம்பள பாக்கியை வாங்க வந்ததாக அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்