எனக்கு தைரியம் கொடுத்ததே விஜய் சார்தான்… ஜெயிலர் மேடையில் நெகிழ்ந்த நெல்சன்!

சனி, 29 ஜூலை 2023 (09:52 IST)
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த நெல்சன் மூன்றாவது படத்திலேயே விஜய்யை  பீஸ்ட் படத்தில் இயக்கும் வாய்ப்பை பெற்றார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான அந்த படம் மோசமான விமர்சங்களைப் பெற்றது. வசூலும் பெரியளவில் இல்லை. இந்த படத்தின் தோல்வியால் நெல்சன் சமூகவலைதளங்களில் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது அவர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நேற்று சென்னையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் நெல்சன் “எனக்கு சூப்பர் ஸ்டாரை சந்தித்து கதை சொல்லும் தைரியமே இல்லை. நான் அதை நினைத்து பயந்திருந்த போது பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு நம்பிக்கைக் கொடுத்து தலைவருக்கு கதை சொல்ல சொன்னதே விஜய் சார்தான்.” எனக் கூறியுள்ளார். மேலும் விஜய்யுடன் இணைந்து கண்டிப்பாக ஒரு படம் மீண்டும் பண்ணுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்