தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாகத் தயாராகும் இந்தப் படத்தை, வெற்றிமாறன் இயக்கி வருகிறார். தற்போது, முதல் பாகம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருக்கிறது. ‘விஐபி 2’ படத்தின் புரமோஷனில் தனுஷ் பிஸியாக இருப்பதால், அவர் வருகைக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், கன்னடத்தில் ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்கப் போவதாகத் தகவல் கிடைத்துள்ளது. 4 பையன்களை மையப்படுத்திய கதையை எழுதியுள்ளார் வெற்றிமாறன். இதில், கெட்ட போலீஸாக நடிக்கிறார் கிஷோர். அவரே, இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவராகவும் இருக்கிறார். ‘வடசென்னை’யில் பிஸியாக இருப்பதால் இதை வெற்றிமாறனே இயக்குவாரா அல்லது வேறு யாராவது இயக்கப் போகிறார்களா எனத் தெரியவில்லை.