ஆம்புலன்ஸோடு ஷூட்டிங்…. அடர் காட்டுப்பகுதியில் முகாமிட்ட விடுதலை படக்குழு

திங்கள், 23 மே 2022 (08:45 IST)
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலைப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மற்றுமொரு கதாபாத்திரத்தில் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் நடிக்கிறார். மேலும் மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். ஆனால் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் இப்போது வரை 60 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளதாம்.

இந்நிலையில் தற்போது கடைசி கட்ட ஷூட்டிங் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் காட்டுப்பகுதிகளில் நடப்பதால் வன விலங்குகள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றின் தாக்குதல் இருக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸோடு படப்பிடிப்பை நடத்துவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்