கமல் படத்துக்கு கதை எழுதி உள்ளாரா வெண்ணிற ஆடை மூர்த்தி… பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்!

புதன், 8 மார்ச் 2023 (15:43 IST)
1965ம் ஆண்டு வெளியான வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமானவர் மூர்த்தி. இப்படத்தில்தான் ஜெயலலிதா மற்றும் நிர்மலா ஆகியோர் அறிமுகமானார்கள். எனவே இப்படத்தின் தலைப்பு மூர்த்திக்கும், நிர்மலாவுக்கும் நிலைத்துப் போனது. குணசித்திர வேடத்தில் நடித்து வந்த மூர்த்தி ஒரு கட்டத்தில் காமெடிக்கு தாவினார். தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்ட மூர்த்தி ரசிகர்களை கவர்ந்தார். ’ஏண்டா மூதேவி. நீ திருந்தவே மாட்டியா?” என்கிற இவரின் புகைப்படத்தோடு கூடிய வாசகம் இப்போதும் முகநூலில் புகைப்பட கமெண்டாக நெட்டிசன்களால் பயன்படுத்தப்படு வருகிறது. தமிழ் சினிமாவில் அதிகமாக இரட்டை அர்த்த வசனங்களைப் பேசியவர் இவராகதான் இருப்பார். இந்நிலையில் 52 ஆண்டுகள் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் சினிமாவை விட்டு முழுவதும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் சாய்வித் சித்ரா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய திரை வாழ்க்கைப் பற்றி பேசிய அவர் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் அவர் கதை எழுதி கமல்ஹாசன் நாயகனாக நடித்த மாலைசூடவா படம் பற்றியும் பேசியுள்ளார். பலருக்கும் அந்த படத்துக்கு கதை எழுதியது வெண்ணிற ஆடை மூர்த்திதான் என்று இப்போதுவரை தெரியாது. இந்த படம் மட்டுமின்றி ருசி என்ற மற்றொரு படத்துக்கும் அவர் கதை எழுதியுள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்