வெங்கட்பிரபுவின் அடுத்த படம்: நாளை முதல் படப்பிடிப்பு தொடக்கம்!

செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (15:07 IST)
வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சிம்பு நடித்த மாநாடு என்ற திரைப்படத்தை இயக்கிய வெங்கட்பிரபு அதன் பிறகு தனது அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் கடந்த சில மாதங்களாக இருந்தார் 
 
வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகரும் முன்னாள் சமந்தாவின் கணவருமான நாக சைதன்யா ஹீரோவாக நடிக்க உள்ளார். 
 
தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் அதே போல் இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இசை அமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் கேரக்டரில் இந்த படத்தில் நாகசைதன்யா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்