ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உணவுப் பொருட்கள்… உதயநிதியை சந்தித்த வரலட்சுமி சரத்குமார்!

வியாழன், 3 ஜூன் 2021 (17:31 IST)
ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உனவுப் பொருட்கள் வழங்கப்படும் விவரத்தை நடிகை வரலட்சுமி சரத்குமார் உதய நிதி ஸ்டாலினிடம் அளித்துள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் Save Shakti-Sankalp Beautiful World-Pedigree India என்ற அமைப்பில் இணைந்து ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளித்து வருகிறார். இந்நிலையில் இப்போதைய ஊரடங்கு காலத்தில் 2 டன் உணவுப் பொருட்களை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. இது சம்மந்தமாக நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.

இந்த சந்திப்பு சம்மந்தமாக ‘Save Shakti-Sankalp Beautiful World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2டன் உணவு வழங்கபட்டு வருகிறது.இச்சேவையை அனைத்து தரப்புக்கும் கொண்டுசேர்க்க அதன் விவரத்தை Save Shakti அறக்கட்டளை நிறுவனர் வரலட்சுமி இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு நன்றி.வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்