3 படங்களை ஓடிடியில் தள்ளிவிட்ட விக்னேஷ் சிவன்!

வியாழன், 3 ஜூன் 2021 (17:17 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் விநியோக நிறுவனம் 3 படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாம்.

விக்னேஷ் சிவன் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் மாறி இப்போது 5க்கும் மேற்பட்ட படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் திரையரங்குகள் இப்போது திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லாததால் அந்த படங்களை எல்லாம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளாராம். முதலில் நயன்தாரா நடிப்பில் அவர் உருவாக்கியுள்ள நெற்றிக்கண் திரைப்படத்தை ரிலிஸ் செய்ய உள்ளாராம்.

அதன் பின்னர் அவர் வாங்கி வைத்துள்ள ராக்கி மற்றும் கூழாங்கல் ஆகிய படங்களை வெளியிட உள்ளாராம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்