4 மொழி திரைப்படத்தில் வரலட்சுமி: இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்

திங்கள், 4 ஏப்ரல் 2022 (18:04 IST)
தமிழ் உட்பட நான்கு மொழிகளில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க நடிகை வரலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார். இவர் மகா மூவிஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் சபரி என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் 
 
தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது 
 
இந்த படத்தில் வரலட்சுமியுடன் கணேஷ் வெங்கட்ராமன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் 
 
கோபிசுந்தர் இசையில் உருவாகும் இந்த படத்தில் என்பவர் அனில்காட்ஸ்  இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்