கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசிய விஷாலின் பேச்சில் திருட்டு டிவிடி குறித்த கவலைதான் மண்டியிருந்தது. உத்தா பஞ்சாப் படத்தின் நிலை நாளைக்கே தமிழ் படங்களுக்கும் வரலாம். எந்த திரையரங்கில் திருட்டு டிவிடி எடுக்கப்படுகிறதோ அதனை கண்டறிந்து அந்தத் திரையரங்குக்கு தடைவிதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வர வேண்டும். திருட்டு டிவிடியை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.