ஒரு ஊர். அங்கு எந்தப் பிரச்சனையுமே ஏற்படுவதில்லை. திருட்டு, கொள்ளை, அடிதடி எதுவும் கிடையாது. அதனால் அங்குள்ள போலீஸ்காரர்களுக்கு எந்த வேலையும் இருப்பதில்லை.
அதனால், அங்குள்ள காவல்நிலையத்தில் பணியாற்றும் 4 போலீஸ்காரர்களையும் வேறு ஊர்களுக்கு மாற்றுவதற்கான உத்தரவு வருகிறது. நான்கு பேருக்கும் அந்த ஊரைவிட்டுப் போக விருப்பமில்லை. அவர்கள் அங்கேயே இருக்க வேண்டும் என்றhல் காவல்நிலையம் செய்ல்பட வேண்டும். காவல் நிலையம் செயல்பட வேண்டும் என்றால் ஊரில் தவறுகள் நடக்க வேண்டும்.