யாஷிகா விபத்து… காரில் இருந்த இரண்டு ஆண்கள்!

வெள்ளி, 30 ஜூலை 2021 (09:55 IST)
நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவரின் தோழி சம்பவ இடத்திலேயே பலியானார்.

நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  மேலும் யாஷிகா சுய நினைவுக்கு வந்த பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என போலிஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்து நடந்த அந்த காரில் இவர்கள் இருவரைத் தவிர இரண்டு ஆண்கள் இருந்ததாகவும், அவர்கள் யார் என்பது வெளியே வரவே இல்லை என்றும், அவர்களிடம் விசாரணை நடத்தப்படவே இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Source –வலைப்பேச்சு

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்