கடன் பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனையில் அவரது தலை மற்றும் உடலின் சில இடங்களில் ரத்தகாயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் தங்கியிருந்த அறையில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. கண்ணாடிகளும் உடைந்து கிடக்கிறது. ஆகவே, அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.