தற்கொலை நாடகம் ஆடிய டிக்டாக் பிரபலம்

புதன், 25 ஆகஸ்ட் 2021 (16:24 IST)
பிரபல டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி போலீஸாரை துன்பப்படுத்தியுள்ளார்.

டிக்டாக்கில் பல சினிமா பாடல்களுக்கு நடித்து மக்களிடம் பிரபலமானார் சூர்யா தேவி.
இவர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதக வீடியோ ஒன்றை அனுப்பிவிட்டு, தூக்குக்கயிற்றை மாட்டி படுத்துத் தூங்கியுள்ளார்.

இந்தத் தற்கொலை நாடகம் வெளியில் தெரியவே, தான் மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

பின்னர், அவரை அழைத்துப் பேசிய போலீஸார் அவரது உறவினர் வீட்டில் அவரை பாதுக்காப்புடன் ஒப்படைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்