இந்த வாரமும் இரண்டு எவிக்சனா? கமல்ஹாசனின் அதிர்ச்சி அறிவிப்பு!

ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (10:59 IST)
இந்த வாரமும் இரண்டு எவிக்சனா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் மட்டுமே எவிக்சன் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் நிஷா மற்றும் ரமேஷ் ஆகிய இருவர் எவிக்சன் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் இந்த வாரமும் ஒருவர் மட்டுமே எவிக்சன் செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் இன்றைய முதல் புரோமோவில் இந்த வாரம் வெளியேறுவது ஒருவரா இருவரா என கமல்ஹாசன் கேள்வி கேட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஏற்கனவே ஆரி, ரியோ, ஆஜித், ஷிவானி, அனிதா, சோம் மற்றும் அர்ச்சனா என ஏழு பேர் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று ரியோ மற்றும் ஆரி ஆகிய இருவரும் சேவ் செய்யப்பட்டனர். இன்று ஷிவானி சேவ் செய்யப்பட்டதாக வந்த தகவலை அடுத்து ஆஜித், சோம், அனிதா மற்றும் அர்ச்சனா ஆகிய நான்கு பேர்கள் தற்போது டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.
 
இன்றைய முதல் புரமோ வீடியோவில் இன்று வெளியேறப் போவது ஒருவரா? அல்லது இருவரா? என கமல்ஹாசன் கேள்வி கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருந்தாலும் அர்ச்சனா இன்று வெளியேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று இரண்டாவதாக ஒருவர் எவிக்சன் செய்யப்படுவாரா என்பதை அடுத்தடுத்த புரமோவில் இருந்து தெரிந்து கொள்ளலாம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்