பிரபாஸுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ

செவ்வாய், 25 மே 2021 (18:22 IST)
பாகுபலி ஹீரோ பிரபாஸின் சலார் படத்தில் இந்திப் பட நடிகர் வில்லனாக நடிக்கவுள்ளார்.

கன்னட இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியாகி இந்திய முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற படம் கேஜிஎஃப். இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டில் வெளியாக உள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் பிரசாத் நீல் பிரபாஸ் நடிப்பில் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். பிரபாஸ் நடிக்கும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் முழுவதுமாக தயாராகி 2022ம் ஆண்டு ஏப்ரல் 14ல் ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது இரண்டாவது கட்ட கொரொனா பரவிவருவதால் இப்படம் வெளியீடு தள்ளிபோகலாம் எனத் தெரிகிறது.

மேலும், சலார் படத்தில் பிரபாஸுக்கு சகோதரியாக ஜோதிகா நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது, ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தில் பிரபாசுக்கு வில்லனாக ஜான் ஆபிரகாம் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தி சினிமா நடிகர்களில் மாடலிங்கிலும், பாடி பிட்னஸிலும் தனக்கு என தனி முத்திரை பதித்தவர் ஜான் ஆபிரகாம் ஆவார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்