தங்கலான் பெரிய வெற்றிப்படம் இல்லை… பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தகவல்!

vinoth

புதன், 28 ஆகஸ்ட் 2024 (15:45 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் முதல் நாளில் தமிழ் நாட்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. ஆனால் அதே நாளில் வெளியான டிமாண்டி காலணி படமும் சூப்பர் ஹிட் ஆனதால் தங்கலான் வசூல் இரண்டாவது வாரத்தில் குறைந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் விமர்சன ரீதியாக படம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களும் பாராட்டிவருகின்றனர். இந்நிலையில் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு பேசிய இயக்குனர் பா ரஞ்சித் “தங்கலான் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 10 நிமிடமாக இருந்தது. ஆனால் நாங்கள் வணிகக் காரணங்களுக்காக நேரத்தைக் குறைத்தோம்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரபல விநியோகஸ்தரும் திரையரங்க உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியம் “தங்கலான் படம் அதன் பட்ஜெட்டை வைத்துப் பார்க்கும்போது பெரிய வசூலை செய்யவில்லை. ஆனால் கடந்த வாரம் வெளியான வாழை திரைப்படம் மிகப்பெரிய வசூலைப் பெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்