விஜய்சேதுபதி பட இயக்குநருக்கு தெரியாமல் ரிலீசான டீசர் !

ஞாயிறு, 7 மார்ச் 2021 (18:01 IST)
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீசர்  கடந்த மார்ச் 4 ஆம் தேதி டீசர் வெளியானது. ஆனால் இப்படத்தின் இயக்குநருக்கு தெரியாமலேயே இப்படத்தின் டீசர் வெளியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 

 இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் யாதும் ஊரே யாவரும் கேளீர்.

இப்படத்தில் ஆகாஷ் மேகா, ரகுஆதித்யா, நடிகர் விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.#YaadhumOoreYaavarumKelir

இந்நிலையில், இப்படம் குறித்த புதிய அப்டேட் எப்போதும் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

எனவே, நேற்று விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் மார்ச் 4 ஆம் தேதி
’’யாதும் ஊரே யாவரும் கேளீர்’’ படத்தின் டீசரை வெளியிட்டார். இது இணையதளத்தில் வைரலாகி விஜய்சேதுபதி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படத்தி இயக்குநருக்குத் தெரியாமலேயே டீசர் வெளியானதாகத் தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து இயக்குநர் வெங்கட ரோகநாத் கூறியுள்ளதாவது : இப்படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் முடியாமல் உள்ளது. ஆனால் இப்படத்தின் டீசர் எனக்குத் தெரியாமல் வெளியாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் விஜய்சேதுபதிக்குதெரியுமா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்