வாரிசு நடிகர்கள் என் வாய்ப்புகளை தட்டிப்பரித்தனர் – தாப்ஸி ஆதங்கம்!

சனி, 4 ஜூலை 2020 (14:18 IST)
பாலிவுட்டில் இருக்கும் வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளின் ஆதிக்கம் பற்றி நடிகை டாப்ஸி கருத்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34) சில வாரங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டது இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் 6 மாதங்களுக்கு மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலிவுட்டில் நிலவும் வாரிசுகளின் ஆதிக்கமே சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பாலிவுட்டில் நிலவும் வாரிசு நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் ஆதிக்கம் பற்றி பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது. இது குறித்து பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான தாப்ஸி தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் ‘சினிமாவுக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கு அதிக அளவில் தொடர்புகள் எதுவும் இல்லை. இதனால் இயக்குனர்கள் தெரிந்த வாரிசு நடிகர்களையே வைத்து படம் இயக்க விரும்புகிறார்கள். என்னுடைய சில படங்களை வாரிசு நடிகர்கள் தட்டிப்பறித்ததை அறிந்து நான் வேதனை அடைந்தேன்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்