சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு எங்கே தெரியுமா?

செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (16:21 IST)
பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் காரைக்குடி படப்பிடிப்பு 51 நாட்கள் நடைபெற்றது என்பதும் அதன் பின் சில நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக குற்றாலம் சென்றுள்ளனர். இது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு என்று கூறப்படுகிறது. குற்றாலத்தில் ஒரு சில நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற உடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதை அடுத்து படக்குழுவினர் சுறுசுறுப்பாக ஒரு பக்கம் படப்பிடிப்பு இன்னொரு பக்கம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்