படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்கம் பரிசளித்த சூர்யா!

புதன், 17 நவம்பர் 2021 (15:18 IST)
சூர்யா நடித்து முடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு தங்க நகைகளை பரிசாக அளித்துள்ளார்.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை சமீபத்தில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாக இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பின் தயாரிப்பு பணிகளை முடித்து படத்தை கிறிஸ்துமஸ் அல்லது பொங்கல் பண்டிகைக்கு ரிலிஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நடிகர் சூர்யா தங்க நாணயங்கள் பரிசளித்திருந்தார். இந்நிலையில் இப்போது அதே போல தன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெய் பீம் படக்குழுவினருக்கும் தங்க நாணயங்களை பரிசாக அளித்துள்ளாராம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்