பொதுமேடையில் மன்னிப்பு கேட்ட சூர்யா

ஞாயிறு, 30 அக்டோபர் 2016 (17:46 IST)
சிவகுமாரின் பிறந்தநாளையொட்டி அவர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. அந்த விழாவில் நடிகர் சூர்யா மேடையில் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.


 

 
அண்மையில் சிவகுமாரின் பிறந்தநாளையொட்டி அவர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. அந்த கண்காட்சியின் நிறைவு நாளன்று சூர்யா மற்றும் கார்த்தி கலந்துக்கொண்டனர்.
 
அப்போது பயில்வான் ரெங்கநாதன் தனது மகனின் திருமணத்திற்கு சூர்யா அலுவலகத்திற்கு பத்திரிகை கொடுக்கச் சென்ற தன்னை யாரும் சரியாக நடத்த வில்லை என்று குற்றம்சாட்டினார்.
 
அதே மேடையில் பேசிய சூர்யா இதற்கு மன்னிப்பு கேட்கும் வகையில் பேசினார். அவர் கூறியதாவது:-
 
இந்த செய்தி என் காதுக்கு வரவில்லை. இந்த மேடையில் அதை பதிவு செய்ததற்கு நன்றி. நிச்சயமாக நாங்கள் அதை திருத்திக் கொள்கிறோம். அந்த மாதிரி ஒரு விஷயம நடந்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்