நானே எதிர்பார்க்காத தடங்கல்: ‘மாநாடு’ குறித்து சுரேஷ் காமாட்சி டுவிட்

வியாழன், 25 நவம்பர் 2021 (12:09 IST)
சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் இந்த படத்திற்கு ஏற்பட்ட தடைகள் குறித்தும் தனக்கு கிடைத்த ஆதரவு குறித்தும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 
 
நானே எதிர்பார்க்காத தடங்கல் #மாநாடு படத்தின் இந்த தாமதம். நேற்று இரவு முழுக்க நிறைய நலம் விரும்பிகள் அழைத்தும் குறுந்தகவலிலும் தைரியமூட்டினர். நிறைய பேரின் அழைப்பை எடுக்க இயலவில்லை. அரசியல் பிரமுகர்கள் , சினிமா பிரபலங்கள், பத்திரிகை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்