அடுத்த பட வேலைகள் பாரிஸ் ஸ்டுடியோவில்?…. ராஜமௌலி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

புதன், 29 ஜூன் 2022 (12:14 IST)
இயக்குனர் ராஜமௌலி RRR படத்தின் வெற்றிக்குப் பிறகு தன்னுடைய அடுத்த படத்தை இன்னும் அறிவிக்கவில்லை.

இயக்குனர் ராஜமௌலி இதுவரை தொட்டதெல்லாம் ஹிட்தான். அதுபோல தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் எல்லோருக்கும் அவர் ஹிட் கொடுத்துவிட்டார். இன்னும் மகேஷ் பாபுவோடு மட்டும் இணையவில்லை. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு இருவரும் இணைய இருக்கின்றனர். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது ராஜமௌலி பாரிஸில் உள்ள Unit Image - 3D Animation Films & Visual Effects நிறுவனத்துக்கு சென்று, அதன் உரிமையாளர்களை சந்தித்துள்ளார். மேலும் இதுகுறித்த அவரது பதிவில் “சில அற்புதமான வேலைகளை நாம் ஒன்றிணைந்து செய்யப்போகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார். இதனால் ராஜமௌலியின் அடுத்த படத்துக்கான வேலைகள் அங்கு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்