பாத் டப்பில் மூழ்கடித்து கொலை? ஸ்ரீதேவி மரணம் விபத்தல்ல: டிஜிபி பகீர் தகவல்!

செவ்வாய், 9 ஜூலை 2019 (14:25 IST)
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல கொலை என தடவியல் நிபுணர் உமாடாதன் தெரிவித்ததாக கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 
 
நடிகை ஸ்ரீதேவி உறவினர் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்ற போது அங்கு தங்கியிருந்த ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் தவரி விழுந்து 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி மரணமடைந்தார். 
 
இவரது இறப்பு பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த சந்தேகத்தை இப்போது உறுதிப்படுத்தும் வகையில் கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் கருத்து இருக்கிறது. இவர் கூறியதாவது, எனது நண்பர் உமாடாதன் தசவியல் நிபுணர், நான் அவரிடம் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து பேசிய போது, அது நிச்சயம் கொலையாக இருக்கலாம் என தெரிவித்தார். 
ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான விசாரணையில் கிடைத்த பல ஆதாரங்கள் அவரது மரணம் விபத்து அல்ல கொலை என்பதையே வெளிப்படுத்தியதாக உமாடாதன் கூறினார். ஒருவர் எவ்வளவு குடித்திருந்தாலும் ஒரு அடி தண்ணீரில் மூழ்கி உயிரிழக்க வாய்ப்பில்லை. 
 
ஆனால் அதேசமயம் யாராவது ஒருவர் அவரது தலையை பிடித்து தண்ணீரில் முழ்கடித்திருந்தால் மட்டுமே உயிரிழக்க முடியும் என உமாடாதன் தெரிவித்ததாக டிஜிபி ரிஷிராஜ்சிங், உமாடாதன் மரணத்தின் பிறகு நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்