மறைந்த பாடகர் எஸ் பி பியின் முதலாம் ஆண்டு நினைவுதினம்!

சனி, 25 செப்டம்பர் 2021 (10:10 IST)
மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழின் முன்னணி பாடகரும் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவருமான எஸ் பி பாலசுப்ரமண்யம்  கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் தீரா துயரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று அவரின் முதலாம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ரசிகர்கள் பலரும் அவரின் பாடல்களைப் பற்றி நினைவு கூர்ந்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்