மீண்டும் சினிமாவில் பிஸியான சினேகா - சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கிறார்

வியாழன், 1 செப்டம்பர் 2016 (14:40 IST)
திருமணம், குழந்தை என்று குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்த சினேகா மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.


 


மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிப்பவர், சிவகார்த்திகேயன் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
 
ரெமோவுக்குப் பிறகு மோகன்ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்தப் படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இதில் முக்கியமான வேடத்தில் நடிக்க தற்போது சினேகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
இனி தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதென சினேகா முடிவு செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்