மாறி மாறி அன்பை பரிமாறிக் கொண்ட சிவகார்த்திகேயனும் பவன் கல்யாணும்!

வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (11:16 IST)
நடிகர் பவன் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பவன் கல்யாணுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த அவர் இப்போது மீண்டும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். நேற்று அவரது 49 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவிக்க, அவருக்கு நன்றி கூறிய பவன் ‘உங்கள் ஊதா கலர் ரிப்பன் பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் எனத் தெரியவில்லை. உங்கள் வெற்றிக்கு வாழ்த்துகள்’ எனக் கூறியிருந்தார்.

அவருக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் ‘உங்கள் பதிலைக் காண மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது சார். என் அன்பை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி’ எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்