இன்று வெளியாகி இருக்கும் 'கத்துக்குட்டி' படம் பார்த்து நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி, இயக்குநர் பொன்ராம் ஆகியோர் 'தமிழ் ரசிகர்கள் தவற விடக்கூடாத படம் கத்துக்குட்டி' எனப் பாராட்டினார்கள். அதுகுறித்த விரிவான விவரம்...
நடிகர் விமல்:
‘கத்துக்குட்டி’ படம் ரொம்ப பிரமாதமா இருக்கு, நல்ல கருத்துக்களை நகைச்சுவையோட சொல்லியிருக்காங்க. இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குனர் இரா. சரவணன் இயக்கி இருக்கிறார், ஆனா அவர் புதுமுக இயக்குனர் போல தெரியல, பல படங்களை இயக்கின அனுபவம் உடையவர் போல உருவாக்கியிருக்கிறார். மீத்தேன் பிரச்சனையை மிக நாசுக்காகவும், தெளிவாகவும் சொல்லியிருக்காங்க, தஞ்சை மண்ணின் வாழ்வியல் பதிவுகள் ரொம்ப அழகா பண்ணியிருக்காங்க. இந்த திரைப்படத்தில் நடித்த நரேன், சூரி, ஸ்ருஷ்டி மற்றும் எல்லா கலைஞர்களும் எதார்த்தமா நடிச்சிருக்காங்க. இது கத்துக்குட்டி இல்ல... கத்துக்குடுக்கிற குட்டி. 100 ரூபாய் பணம் கொடுத்து நாம ஒவ்வொருத்தரும் பார்க்க வேண்டிய படம். குடும்பத்தோட பாருங்க. நிச்சயம் கொண்டாடுவீங்க. தயவு பண்ணி மிஸ் பண்ணிடாதீங்க..."
நடிகர் சூரி:
‘கத்துக்குட்டி’ திரைப்படத்தில நடிச்சது ரொம்ப பெருமையாவும், சந்தோசமாவும் இருக்குது எனக்கு. உங்க மனச தொடுகிற முக்கியமான பத்து படங்கள்ள இந்த கத்துக்குட்டியும் இருக்கும்னு நம்புறேன். உங்கள்ள ஒருவனா சொல்லுறேன் கத்துக்குட்டி மிக அற்புதமான படம். நிச்சயமா தியேட்டர்ல போயி பாருங்க.
இயக்குநர் பொன்ராம்:
‘கத்துக்குட்டி’ சூப்பர் எண்டர்டைமன்ட் படம், முதல் பகுதியில சூரி அண்ணனும், நரேனும் கலக்கி இருக்காங்க. அங்கங்க செம காமடியா இருக்கு. ஒரு கமர்ஷியல் படத்துக்கான அத்தனையும் இதுல இருக்கு. க்ளைமாக்ஸ் சீன் ரொம்ப சஸ்பன்ஸா இருந்தது. யாராலயும் கணிக்க முடியாத க்ளைமாக்ஸை பிக்ஸ் பண்ணி இயக்குநர் மிரள வைச்சிருக்கார். அருமையான கிளைமேக்ஸ், ரொம்ப என்ஜாய் பண்ணி கைதட்டுற கிளைமேக்ஸ். இந்த படம் மிக அற்புதமான கருத்துக்கள் உள்ள எண்டர்டைமன்ட் படம். இப்படி ஒரு அற்புத படைப்பை வழங்கிய கத்துக்குட்டி குழுவினருக்கு எனது வாழ்த்துகள்.