சிவகார்த்திகேயன் படத்துக்காக துபாயில் நடக்கும் திரைக்கதை பணிகள்!

வெள்ளி, 4 மார்ச் 2022 (16:30 IST)
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்து உள்ளது என்பதும் அந்த வகையில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து இப்போது படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி படத்தின் திரைக்கதை பணிகளுக்காக துபாயில் முகாமிட்டுள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்