சிவகார்த்திகேயன் படத்துக்கு தேடப்படும் வெளிநாட்டு கதாநாயகி!

புதன், 15 டிசம்பர் 2021 (10:22 IST)
சிவகார்த்திகேயன் தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளில் நடிக்க உள்ள படத்துக்காக வெளிநாட்டு கதாநாயகி ஒருவரை தேடி வருகிறார்களாம்.

புதுமுக இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவான தெலுங்குத் திரைப்படம் 'ஜாதி ரத்னாலு'. நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் அந்த படத்தின் இயக்குனர் மீது கவனம் அதிகமாக விழுந்துள்ளது. இந்நிலையில் அவர் அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் தமிழ்- தெலுங்கு மொழி படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் ஆக அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ள நிலையில் இப்போது படத்தின் கதாநாயகி தேடும் படலம் நடந்து வருகிறதாம். கதைப்படி வெளிநாட்டில் இருந்து சுற்றுலாவுக்காக இந்தியாவுக்கு வரும் ஒரு பெண்ணுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஏற்படும் காதல்தான் படத்தின் கதையாம். அதனால் ஏமி ஜாக்சன் போல ஒரு வெளிநாட்டு பெண்ணை இப்போது படக்குழு தேடி வருகிறதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்