அயலான் பற்றி அப்டேட் கொடுத்த படத்தொகுப்பாளர்!

செவ்வாய், 25 ஜனவரி 2022 (15:21 IST)
சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட  5 ஆண்டுகள் முடியவுள்ள நிலையில் படம் இன்னும் ரிலிஸ் ஆகவில்லை.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

பட்ஜெட் மற்றும் கொரோனா பாதிப்பால் இந்த படம் பாதிக்கப்பட்டு இப்போது ஷூட்டிங் முடிந்து கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது இப்போது வரை தயாரிப்பாளருக்கே உறுதி ஆகாத சூழல்தான் நிலவி வருகிறது. இந்நிலையில் படத்தின் படத்தொகுப்பாளர் ரூபன் அளித்த நேர்காணலில் படத்தின் தரம் பற்றி பேசியுள்ளார். அதில் ‘படம் ஹாலிவுட் படத்தின் தரத்துக்கு நிகராக இருக்கும். சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மைல்கல்லாக இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்