பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு டீஆக்டிவேட்!

சனி, 4 மார்ச் 2017 (16:16 IST)
கடந்த சில நாட்களாக, பாடகி சுசித்ரா டிவிட்டரில் பதிவு செய்து வரும் தகவல்கள் மற்றும் வீடியோ, புகைப்படங்கள் மிகுந்த  பரபரப்பையும், பலத்த சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. அட்ஜஸ்மெண்ட என்ற பெயரில் நடிகை, நடிகர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் என பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியான படங்கள் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

 
சினிமா நடிகர், நடிகைகளின் அந்தரங்கப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பினார்  பாடகி சுசித்ரா. ஆனால், அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக அவரது கணவர் விளக்கமளித்தார். இன்னும்  பல ரகசியத் தகவல்களை வெளியிட உள்ளதாக அதில் அந்த ட்விட்டர் கணக்கில் கூறப்பட்டது. இதனால், திரையுலகில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நடிகர், நடிகைகளின் அந்தரங்கப் படங்களை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பிய பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கு  முடக்கப்பட்டது.
 
இந்நிலையில், நடிகர், நடிகைகளின் அந்தரங்கப் படங்களை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பிய சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு  முடக்கப்பட்டுள்ளது. சுசித்ரா தரப்பில் யாரும் காவல்துறையின் உதவியைக் கோரி அந்த ட்விட்டர் கணக்கை நீக்கினார்களா என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இதுபற்றி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளதா? என தெரியவில்லை. ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதில் வலைத் தளவாசிகள் அப்செட் ஆகிவிட்டார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்