படத்தைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் துபாய் பறந்த சிம்பு!

வியாழன், 16 நவம்பர் 2023 (07:51 IST)
பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வீடியோவோடு வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது அடுத்த ஆண்டுதான் ஷுட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்துக்காக காத்திருந்த சிம்பு, இப்போது வெக்கேஷனுக்காக சிம்பு துபாய் கிளம்பி விட்டாராம். படப்பிடிப்பு தொடங்கும் போது அவர் மீண்டும் இந்தியா திரும்புவார் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்