கோயிலுக்கு வெளியே முத்தம் கொடுத்த நட்சத்திர தம்பதி… கிளம்பியது சர்ச்சை!

புதன், 15 செப்டம்பர் 2021 (09:56 IST)
திருப்பதியில் தனது கணவரோடு நேற்று விஐபி தரிசனம் செய்தார் நடிகை ஸ்ரேயா.

தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இடையில் பெரிய சம்பளத்துக்காக வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குறைய வெளிநாட்டுக் காதலரை திருமணம் செய்துகொண்டு பாரினிலேயே செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்த அவர் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் தனது கணவரோடு திருப்பதி தேவஸ்தானத்துக்கு வந்து வழிபாடு நடத்தினார்.

அப்போது கோயிலுக்கு வெளியே அவர்களைப் பலரும் புகைப்படம் எடுக்க ஸ்ரேயாவின் காதலர் அவருக்கு முத்தம் கொடுத்தார். இந்நிலையில் கோயிலுக்கு வெளியே இப்படி இதுபோல நடந்து கொள்ளலாம் என பலரும் அந்த தம்பதியைக் கண்டிக்க ஆரம்பித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்