நீங்களே சொல்லுங்க இப்படி பண்லாமா..? ஊரடங்கில் நடுரோட்டில் நடனமாடிய நடிகை ஸ்ரேயா !

புதன், 13 மே 2020 (07:33 IST)
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது.

இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவரும் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகின்றனர். அவ்வப்போது தனது ரொமான்ஸ் செய்வது, விளையாடுவது , மேஜிக் செய்வது உள்ளிட்ட விடீயோக்களை ஸ்ரேயா தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு சமயத்தில்  பார்சிலோனா நகரில் நடுரோட்டில் மழையில் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தீயாக பரவி, கொரோனா ஊரடங்கில் மாஸ்க் கூட அணியாமல் வெளியில் சுற்றுவது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

All I'm saying let's give love a chance @elahe_hiptoola Just another rainy day in Barcelona.... Nee varum poothu naan maraivenaa @brinda_gopal thank you for choreographing this lovely song,one of my favorite....

A post shared by Shriya Saran (@shriya_saran1109) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்