தெலுங்கு சினிமா ஸ்ட்ரைக்… இயக்குனர் ஷங்கர் எடுத்த முடிவு!

சனி, 6 ஆகஸ்ட் 2022 (16:45 IST)
இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். ஆனால் இப்போது தெலுங்கு சினிமாவில் ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த இடைவேளையைப் பயன்படுத்திக் கொண்டு ஷங்கர் தற்போது உடனடியாக இந்தியன் 2 திரைப்படத்தைத் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால் விரைவில் இந்தியன் 2 தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்