வேள்பாரி படத்துக்கு ஷங்கரின் முதல் சாய்ஸ் இந்த தமிழ் ஹீரோதானா? மிஸ் ஆன காம்பினேஷன்!

புதன், 16 நவம்பர் 2022 (16:05 IST)
இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.


முதலில் இரண்டு பாகங்களாக உருவாக இருந்த இந்த மெஹா பட்ஜெட் திரைப்படம் இப்போது 3 பாகங்களாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் முதலில் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் என சொல்லப்பட்ட இந்த படம் இப்போது ஒவ்வொரு பாகமும் சுமார் 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் கதாநாயக்ன் யார் என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஷங்கர், இந்த படத்துக்கு முதல் சாய்ஸாக நடிகர் விஜய்யைதான் முடிவு செய்திருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் சில பல காரணங்களால் அது, அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்