தூதுவிட்ட பிரம்மாண்ட இயக்குனர்… கண்டுகொள்ளாத AK.. பின்னணி என்ன?

vinoth

வியாழன், 27 பிப்ரவரி 2025 (14:10 IST)
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில், தில் ராஜூ தயாரித்த ‘கேம்சேஞ்சர்’ திரைப்படம் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியிருந்தார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க, தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

படம் மிக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி ரிலீஸானது. முதல் நாளில் உலகளவில் 186 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் எழுந்த எதிரமறையான விமர்சனங்களால் வசூலில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால் இந்த படத்தின் பட்ஜெட்டில் 50 சதவீத வசூலைக் கூட படம் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஷங்கரின் அடுத்த படம் என்ன என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி பகிர்ந்துள்ள தகவலின் படி “ஷங்கர், அஜித்தை சந்தித்துப் பேசவேண்டும் என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஆனால் இதுவரை அஜித் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்