’இந்தியன் 2’ சமரச பேச்சுவார்த்தை தோல்வி: மீண்டும் நீதிமன்றமா?

புதன், 28 ஏப்ரல் 2021 (14:08 IST)
இந்தியன்-2 சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக இயக்குனர் ஷங்கர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என லைகா நிறுவனம் சமீபத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தயாரிப்பு மற்றும் இயக்குனர் தரப்பினர் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது
 
இதனை அடுத்து சமீபத்தில் ஷங்கர் தரப்பும் லைகா நிறுவனத்தின் தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியபோது பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இது குறித்து ஷங்கர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டபோது ’ஜூன் முதல் அக்டோபர் மாதத்திற்குள் இந்த படத்தை முடித்துக் கொடுப்பதாக தான் தெரிவித்ததாகவும் ஆனால் தயாரிப்பு தரப்பு ஜூன் மாதத்திற்குள் படத்தை முடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்
 
இதனையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் மாதம் தொடங்கும் நடக்கும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்