ஷங்கரின் ரூ.1000 கோடி பட்ஜெட் படம்! ஹிருத்திக்ரோசன் ஹீரோ!

ஞாயிறு, 10 ஜூலை 2022 (19:34 IST)
ஷங்கர் ஒரு பிரமாண்டமான படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் பாலிவுட் மற்றும் தெலுங்கு பட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது ராம்சரண் –கியாரா அத்வானி நடிப்பில் ஆர்.சி15 படத்தை இயக்கி வருகிறார்.

வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் சுரேஷ் கோபி, ரஹ்மான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யாவிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்திற்கு  ‘அதிகாரி’ என்று தலைப்பு வைக்க பரிசீலனை செய்துவருவதாக சொல்லப்படுகிறது.

பிரமாண்டமாக உருவாகிவரும் இப்படத்தை முடித்த பின், இந்தியன்-2 படத்தை இயக்கவுள்ளார். இப்படங்களை முடித்தபின், எந்திரன் படத்தை போன்று ஒரு  நீருக்கடியில் அறிவியல் என்ற  படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படம் இதுவாய் இந்திய சினிமாவில் இல்லாத வகையில் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஹீரோவாக ஹிருத்திக் ரோசன் மற்றும் ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்