அடுத்த மாதம் சந்திக்கும் ஷங்கர் & ராம் சரண் – இறுதி முடிவு என்ன?

புதன், 30 ஜூன் 2021 (08:51 IST)
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது அறிவிக்கப்படாத நிலையில் இப்போது கியாரா அத்வானி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் பெயர் அடிபட்டு வந்தது. இந்நிலையில் இப்போது கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லைகா உடனான பிரச்சனைகளை முடித்துவிட்டு ஷங்கர் ராம்சரண் தேஜாவின் படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஷங்கருக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையே இந்தியன் 2 தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. ராம் சரண் ஆர் ஆர் ஆர் படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். இதனால் தனது அடுத்த படத்தை துவங்கும் முனைப்பில் உள்ளார். இந்நிலையில் அடுத்த மாதத்தில் ஷங்கரும் ராம் சரண் தேஜாவும் சந்தித்து தங்கள் படத்தை எப்போது துவங்குவது என்பது குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்