ஷாருக்கான் மகனிடம் நள்ளிரவு வரை விசாரணை...

சனி, 13 நவம்பர் 2021 (18:43 IST)
போதைப் பொருள் விவகாரத்தில் கைதாகியுள்ள சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகனிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

சமீபத்தில் சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்ட ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட ஒன்பது பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். பின்னர் ஆர்யன் கானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் போதைப்ப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை அலுவலகத்தில் ஆஜராகி  வருகிறார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு வரை ஆர்யன் கானிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தினர்.

இதை அதிகாரிகள் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மேலும் சில தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்