வடிவேல் பாணியில் நடிகரிடம் பணம் வசூலித்த கும்பல்!

திங்கள், 28 செப்டம்பர் 2020 (11:34 IST)
இந்தி தொலைக்காட்சி நடிகர் சஞ்சய் சவுத்ரியை மிரட்டி பட்டபகலில் ஒரு கும்பல் பணம் பறித்துள்ளது.

இந்தி தொலைக்காட்சி சேனல்களில் பல சீரியல்களில் நடித்த புகழ் நடிகர் சஞ்சய் சவுத்ரி. இவர் காரில் சென்று கொண்டிருந்த போது அருகே ஸ்கூட்டியில் வந்த கும்பல் தங்கள் ஸ்கூட்டி மேல் இடித்து விபத்து ஏற்படுத்தியதாக சொல்லி அவரிடம் ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டி உள்ளனர். இது சம்மந்தமாக அவர் சமூகவலைதளத்தில் பதிவு செய்ய அது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்